×

கரூர் காந்திகிராமம் சாலையோர திறந்த கால்வாய்களை மூட வேண்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

கரூர்: கரூரில் இருந்து திருச்சி உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் காந்திகிராமம் வழியாக செல்கிறது. தெரசா கார்னர் பகுதியில் இருந்து ரயில்வே மேம்பாலம் வரை காந்திகிராமம் பகுதியின் இருபுறமும் அதிகளவு வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. இந்த சாலையின் இருபுறமும் சாலையோரம் சாக்கடை வடிகால் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மேலும், சாலையின் மையத்தில் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சாலையோர வடிகால்கள் பல்வேறு பகுதிகளில் திறந்த நிலையில் உள்ளதால், விபத்து அபாயம் ஏற்படும் சூழல் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இரவு நேரங்களில் இந்த சூழல் அதிகமாகவே உள்ளது.

The post கரூர் காந்திகிராமம் சாலையோர திறந்த கால்வாய்களை மூட வேண்டும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? appeared first on Dinakaran.

Tags : Karur ,Gandhigram ,Trichy ,Teresa Garner… ,Karur Gandhigram ,Dinakaran ,
× RELATED 2030ல் பசுமையான தமிழகம் உருவாக்குவோம்...